/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஷூட்டிங் பால் போட்டி அ.குறிச்சி மாணவர் தேர்வு
/
ஷூட்டிங் பால் போட்டி அ.குறிச்சி மாணவர் தேர்வு
ADDED : பிப் 17, 2025 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி,: தெலுங்கானா ஷூட்டிங் பால் சங்கம் சார்பில், தென் மண்டல அளவிலான ஷூட்டிங் பால் போட்டி தெலுங்கானாவில், பிப்., 21 முதல், 23 வரை நடக்கிறது.
இதில், தமிழக அணி சார்பில் விளையாட அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுா-ரியில், கணினி அறிவியல் மூன்றாமாண்டு படிக்கும் மாணவர் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு, கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்தனர்.