/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் - ஈரோடு சாலையில் எரியாத சிக்னல் விளக்குகள்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
கரூர் - ஈரோடு சாலையில் எரியாத சிக்னல் விளக்குகள்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
கரூர் - ஈரோடு சாலையில் எரியாத சிக்னல் விளக்குகள்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
கரூர் - ஈரோடு சாலையில் எரியாத சிக்னல் விளக்குகள்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : பிப் 17, 2025 02:50 AM
கரூர்: கரூர் - ஈரோடு விரிவாக்க சாலையில், சிக்னல் விளக்குகள் எரி-யாததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
கரூர் - ஈரோடு சாலை வழியாக, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பஸ், லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், ஆத்துார் பகுதியில் பாரத் பெட்-ரோலிய நிறுவனம் செயல்படுவதால், ஈரோடு சாலை, வடிவேல் நகர் முதல், ஆத்துார் பிரிவு வரை, கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், சாலை விரிவாக்க பணிகள் நடந்தன.பின், ஆத்துார் பிரிவில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த, கம்-பங்கள் போடப்பட்டு சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால், சிக்னல் கம்பத்தில் உள்ள விளக்குகள் எரியவில்லை. இதனால், புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள, கரூர் - ஈரோடு சாலை, ஆத்துார் பிரிவு பகுதியில், அடிக்கடி போக்குவ-ரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, புதிய விரிவாக்க சாலையில், சிக்னல் கம்பங்களில் உள்ள விளக்குகள் எரியும் வகையில், நெடுஞ்சாலைத்துறை அதி-காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.