ADDED : செப் 18, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூரில், நாளை முன்னாள் ராணுவ வீரர் குறைதீர் கூட்டம் நடக்கிறது என, கலெக்டர்
தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை (19ம் தேதி) மதியம், 2:30 மணிக்கு முன்னாள் ராணுவ வீரர் சிறப்பு குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இந்த மாவட்டத்தை சேர்ந்த, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்று, குறைகளை மனுக்களாக அளிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.