/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அய்யர்மலை கோவிலில் இன்று சோம வார நிகழ்ச்சி
/
அய்யர்மலை கோவிலில் இன்று சோம வார நிகழ்ச்சி
ADDED : நவ 18, 2024 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலையில் ரெத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்-கோவிலில் கார்த்திகை மாதம் திங்கள் கிழமைதோறும், 'சோம வார' நிகழ்ச்சி நடப்பது வழக்கம். மேலும், கடந்த இரண்டு மாதங்களாக ரோப் கார் செயல்-பாட்டில் இருந்து வருவதால், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவு வர வாய்ப்பு உள்ளது.
இதனால், பாதுகாப்பு நடவடிக்கை, ரோப்கார் பயணத்தை தடை-யில்லாமல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.