ADDED : ஜூலை 05, 2026 05:11 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த கீரனுார் பஞ்., கொட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்
நாகராஜன், 42; கூலி தொழிலாளி. இவரது மகன் தீபன், 15.
பி.உடையாப்பட்டி தனியார் பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த, 1ல் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றவர், மாலை வீடு
திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த
தகவலும் கிடைக்கவில்லை. மகனை காணவில்லை என தந்தை கொடுத்த புகார்படி,
தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
