/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மானாவாரி நிலத்தில் கொள்ளு விதைப்பு
/
மானாவாரி நிலத்தில் கொள்ளு விதைப்பு
ADDED : டிச 08, 2025 09:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார், வீரியபா-ளையம், பாப்பகாப்பட்டி, சிவாயம், பஞ்சப்பட்டி, கருப்பத்துார் ஆகிய பஞ்., கிராமங்களில், மானா-வாரி நிலங்களில் கொள்ளு சாகுபடி செய்யப்படு-கிறது.
தற்போது, கார்த்திகை மாதம் கடைசி என்-பதாலும், தொடர்ந்து சாரல் மழை பெய்து வரு-வதால் கொள்ளு சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது. இதனால், டிராக்டர் மூலம் உழவு செய்து, கொள்ளு விதை பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்-ளனர்.

