/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெங்கமேடு பாலத்தில் 'யு-டர்ன்'விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
வெங்கமேடு பாலத்தில் 'யு-டர்ன்'விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
வெங்கமேடு பாலத்தில் 'யு-டர்ன்'விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
வெங்கமேடு பாலத்தில் 'யு-டர்ன்'விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 08, 2025 09:10 AM
கரூர்: கரூர், ரத்தினம் சாலை பகுதியில், மூன்று சாலைகள் பிரிகின்றன. இந்த சாலையில், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரத்தினம் சாலையில் இருந்து வெங்கமேடு மேம்பாலத்தில் ஏறி, இறங்கும் வாகனங்கள், மற்ற இரண்டு சாலை-களில் வாகனங்களுடன் மோதி கொள்ளுகின்றன. இதற்காக சர்ச் கார்னர் மூதல் வெங்கமேடு பாலம்
வரை சென்டர் மீடியன் வைக்கப்பட்டுள்ளது.
இதனால், பாலத்தின் கீழ் உள்ள சாலை வழியாக வாகனங்கள் மறுபக்கம் செல்ல வேண்டும்.
இதில், சுற்றி செல்ல வேண்டி இருப்பதால், இரு-சக்கர வாகன ஓட்டிகள், சென்டர் மீடியன் ஒரு பக்கம் சாலை வழியாக சென்று,
யு-டர்னில் மறு-பக்கம் சாலைக்கு செல்கின்றனர். இதனால், பலத்தில் வரும் வாகனத்திடன் மோதி விபத்து ஏற்படுகிறது.
மேலும், போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படும் வகையில் மினி பஸ்கள் நின்று, பயணிகளை ஏற்றி செல்கின்றனர். அப்-போது,
பயணிகள் சாலையில் நடக்கும் போது, மேம்பாலத்திலிருந்து வேகமாக வரும் வாக-னங்கள் மோதி விபத்தில் சிக்கும்
சம்பவங்கள், அன்றாட நிகழ்வாகி வருகிறது. இவ்வாறு போக்-குவரத்து நெரிசல் உள்ள சாலையில், போக்குவ-ரத்து போலீசார்
நிற்பது கிடையாது. இதனால், வாகனங்கள் தொடர்ந்து போக்குவரத்து விதி-களை மீறி, இஷ்டத்திற்கு செல்கின்றனர்.எனவே, போலீசார் கண்காணித்து உரிய நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

