/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழிமலை கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை
/
புகழிமலை கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை
ADDED : ஜன 06, 2025 01:53 AM
கரூர்: புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், மார்கழி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி, சிறப்பு பூஜை, நேற்று நடந்தது.
கரூர் மாவட்டம், புகழிமலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரம-ணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவருக்கு, மார்-கழி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடந்தது.அதைதொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் மூலவர், பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிர-சாதம் வழங்கப்பட்டது.
அதேபோல், நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும், மார்கழி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.