ADDED : பிப் 24, 2024 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கோம்புபாளையம் கிராம பஞ்சாயத்தில், சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.
அதில் கடந்த ஓராண்டில், 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெற்ற பணிகளின் அளவு, செய்து முடிக்கப்பட்ட பணிகள், பணியாளர்களின் எண்ணிக்கை, பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கணக்குகள் குறித்து சமூக தணிக்கையாளர் மகேஸ்வரி படித்து காட்டி விளக்கம் அளித்தார்.
கிராம சபை கூட்டத்தில், ஏ.பி.டி.ஓ., நிர்மல், பஞ்., தலைவர் பசுபதி, செயலாளர் வேதா மற்றும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.