/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆவணி மாத ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
/
ஆவணி மாத ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
ஆவணி மாத ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
ஆவணி மாத ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED : செப் 05, 2025 01:31 AM
கரூர், நொய்யல் அருகே கோம்புப்பாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், ஆவணி மாத ஏகாதசியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து துளசி இலை மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சீனிவாச பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* குட்டக்கடை --புன்னம் செல்லும் சாலையில் உள்ள, அனுமந்தராய பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு அனுமந்தராயனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
* நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில், ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.