/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி
/
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி
ADDED : செப் 27, 2025 01:18 AM
கரூர் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் அக்.,15ல் நடக்கிறது.
-கரூர், தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுாரியில் அக்.,14 காலை, 9:30 மணிக்கு பள்ளி மாணவ, மாணவியருக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி நடக்கிறது. இதில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். 15ம் தேதி கல்லுாரி மாணவ, மாணவியருக்கு போட்டி நடக்கிறது.
ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு பள்ளி, கல்லுாரி என மொத்தம், 3 மாணவர்கள் பங்கேற்கலாம். மாணவர்கள் விண்ணப்பங்களை, கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரிலோ, அஞ்சல் முலமாகவோ, adtamildevelopmentkarur@gmail.com என்ற இ-மெயில் அக்.,10க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு கரூர் கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டடத்திலுள்ள, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்- 04324- 255077 ஐ தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை கலெக்டர் தங்கவேல்
தெரிவித்துள்ளார்.