/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வரும் 17ல் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி
/
வரும் 17ல் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி
வரும் 17ல் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி
வரும் 17ல் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி
ADDED : ஜூலை 13, 2025 01:38 AM
கரூர், 'பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கான பேச்சு போட்டி வரும், 17 ல் நடக்கிறது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி வரும், 17ல் தமிழ் வளர்ச்சி துறை சார்பில், கரூர் கலெக்டர் அலுவலக வளாகம் கூடுதல் கட்டிடத்தில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு -----பேச்சுப்போட்டி நடக்கிறது.
இதில், 6 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர், மாணவியருக்கு, காலை, 9:30 மணி முதல், 1:00 மணி வரையிலும், கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பிற்பகல், 1:30 மணிக்கும் நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் முதல் பரிசு, 5,000 ரூபாய்,- இரண்டாம் பரிசு, 3,000 ரூபாய்-, மூன்றாம் பரிசு, 2,000 ரூபாய்- வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை, 2,000 ரூபாய் வீதம் வழங்கப்படும்.
கல்லுாரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவி
ல் முதல் பரிசு, 5,000 ரூபாய்,- இரண்டாம் பரிசு, 3,000 ரூபாய்,- மூன்றாம் பரிசு, 2,000 ரூபாய்- வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு கரூர் கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டடத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி: 04324 - 255077 எண்ணில் தொடர்ப்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.