/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநில அளவிலான தடகளம் கல்லுாரி மாணவர் அசத்தல்
/
மாநில அளவிலான தடகளம் கல்லுாரி மாணவர் அசத்தல்
ADDED : அக் 14, 2025 01:53 AM
குளித்தலை, குளித்தலை, அரசு கலைக் கல்லுாரி மூன்றாம் ஆண்டு தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர் ஜீவானந்தம்.
இவர் கரூர் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை தடகள போட்டியில் குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
இதனால், சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்ட ஜீவானந்தம், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.
மாணவர் ஜீவானந்தத்தை கல்லுாரி முதல்வர் சுஜாதா மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் அன்பரசு, தமிழ் துறையை தலைவர் ஜெகதீசன், உடற்கல்வி இயக்குனர் வைரமூர்த்தி, பாரதிதாசன்
பல்கலைக்கழக மேலவை உறுப்பினர் வேணுகோபால், வணிகவியல் துறை தலைவர் பெரியசாமி மற்றும் பலர் பாராட்டி வாழ்த்தினர்.