/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மலைக்கோவிலுாரிலிருந்து மூலப்பட்டிக்கு பஸ்கள் இயக்க மாணவர்கள் வலியுறுத்தல்
/
மலைக்கோவிலுாரிலிருந்து மூலப்பட்டிக்கு பஸ்கள் இயக்க மாணவர்கள் வலியுறுத்தல்
மலைக்கோவிலுாரிலிருந்து மூலப்பட்டிக்கு பஸ்கள் இயக்க மாணவர்கள் வலியுறுத்தல்
மலைக்கோவிலுாரிலிருந்து மூலப்பட்டிக்கு பஸ்கள் இயக்க மாணவர்கள் வலியுறுத்தல்
ADDED : செப் 21, 2025 01:31 AM
அரவக்குறிச்சி :மலைக்கோவிலுாரில் இருந்து, மூலப்பட்டிக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலுாரில் இருந்து, 6 கி.மீ., தொலைவில் மூலப்பட்டி கிராமம் உள்ளது.இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மூலப்பட்டி, வடுகநாகம்பள்ளி, குப்பை மேட்டுப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர்.
ஐந்தாம் வகுப்பு படித்து முடித்தவுடன், உயர்நிலையில் சேர வேண்டும் என்றால், 6 கி.மீ., துாரம் உள்ள மலைக்கோவிலுார் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டும்.இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காலை, மாலை என பள்ளி நேரத்திற்கு அரசு பஸ்கள் மூலப்பட்டி வரை இயக்கப்பட்டது. இதை மாணவர்கள், பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் கொரோனாவிற்கு பிறகு, 4 ஆண்டுகளாக பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் தினமும் 6 கி.மீ., வரை நடந்து சென்று படிக்கும் அவல நிலை உள்ளது.
மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நலன் கருதி, நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.