/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு திருநங்கைகள் மனு வழங்கல்
/
பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு திருநங்கைகள் மனு வழங்கல்
பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு திருநங்கைகள் மனு வழங்கல்
பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு திருநங்கைகள் மனு வழங்கல்
ADDED : ஜூலை 15, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், பட்டா வழங்காமல் இழுத்தடிக்கப்படுகின்றனர் என, திருநங்கைகள் சார்பில், கரூர் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வசித்து வருகிறோம். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், இலவச பட்டா வழங்குவதாக கூறி, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, 10 திருநங்கைகளிடம் தொடர்பு கொண்டனர். அது குறித்து பலமுறை பேசியும், இன்னும் பட்டா வழங்கவில்லை. எங்களுக்கு பட்டா வழங்க இவ்வளவு தாமதம் ஏன் என்று தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.