sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரெங்கநாதபுரத்துக்கு பஸ் வசதி கரூர் கலெக்டரிடம் மனு வழங்கல்

/

ரெங்கநாதபுரத்துக்கு பஸ் வசதி கரூர் கலெக்டரிடம் மனு வழங்கல்

ரெங்கநாதபுரத்துக்கு பஸ் வசதி கரூர் கலெக்டரிடம் மனு வழங்கல்

ரெங்கநாதபுரத்துக்கு பஸ் வசதி கரூர் கலெக்டரிடம் மனு வழங்கல்


ADDED : நவ 05, 2024 01:52 AM

Google News

ADDED : நவ 05, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரெங்கநாதபுரத்துக்கு பஸ் வசதி

கரூர் கலெக்டரிடம் மனு வழங்கல்

கரூர், நவ. 5-

ரெங்கநாதபுரத்தில் பஸ் வசதி கேட்டு, அப்பகுதியை சேர்ந்த சிலம்பரசன் உள்பட சிலர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது:

கிருஷ்ணராயபுரம் அருகில் ரெங்கநாதபுரத்தில், 7,000 பேர் வசிக்கின்றனர். 3,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்கின்றனர். இங்கு, நெல், சோளம், சூரியகாந்தி பயிர் சாகுபடி நடக்கிறது. கட்டளை, மலையப்பபுரம், நத்தமேடு, மேலகட்டளை, ரெங்கநாதபுரம், வளையல்காரன்புதுார், ஜானனுார் போன்ற ஊர்கள் இருக்கின்றன. இந்த கிராமத்திற்கு போதிய பஸ் வசதிகள் இல்லை. அதோடு இல்லாமல், குளித்தலை, லாலாபேட்டை, மகாதானபுரம், பஞ்சப்பட்டி, கடவூர், மாவத்துார் ஊர்களில் இருந்து விவசாய வேலைகளுக்கு ஆட்கள் வந்து செல்கின்றனர்.

இவர்கள், வந்து செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. இவ்வூரிலிருந்து டெக்ஸ்டைல், கொசுவலை, கட்டட வேலைகளுக்கு சென்று வருகின்றனர். அவர்களின் வசதிக்காக தினசரி காலை, மாலை நேரங்களில் தலா மூன்று தடவை பஸ் வந்து சென்றால் பயனுள்ளதாக இருக்கும். இது சம்மந்தமாக இரண்டுமுறை மனு அளித்தும், இதுநாள்வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மனுவிற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றால், போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us