/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கருப்பத்துார் சாலையில் குப்பை தேக்கத்தால் அவதி
/
கருப்பத்துார் சாலையில் குப்பை தேக்கத்தால் அவதி
ADDED : நவ 15, 2024 02:06 AM
கருப்பத்துார் சாலையில்
குப்பை தேக்கத்தால் அவதி
கிருஷ்ணராயபுரம், நவ. 15-
கருப்பத்துார் சாலை அருகில், குப்பை தேங்கி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, கள்ளப்பள்ளி பஞ்சாயத்து வார்டு பகுதிகளில் குப்பை சேகரிக்கப்பட்டு, கருப்பத்துார் செல்லும் சாலையோர இடங்களில் கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது. கடந்த மாதம் முதல் சாலையோர இடங்களில் அதிகமான குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதை அப்படியே விட்டு விட்டதால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு
ஏற்பட்டுள்ளது.
இதுதவிர பிளாஸ்டிக் கழிவு குப்பை அங்கிருந்து பரவி, விவசாய விளை நிலங்களில் தேங்கி வருகிறது. எனவே, பஞ்சாயத்து நிர்வாகம் தேங்கி வரும் குப்பையை உடனடியாக அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க
வேண்டும்.