/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 30, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் கரூர் கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட இணை செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். சின்னதாராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் மோகனவள்ளியின், ஊழியர் விரோத போக்கை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த கட்ட போராட்டமான காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் ஜெயராம், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணி, மாவட்ட இணை செயலாளர் இளங்கோ உள்பட பலர் பங்கேற்றனர்.