sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் மாவட்டத்துக்கு 4.50 லட்சம் பனை விதைகள் இலக்கு; கலெக்டர்

/

கரூர் மாவட்டத்துக்கு 4.50 லட்சம் பனை விதைகள் இலக்கு; கலெக்டர்

கரூர் மாவட்டத்துக்கு 4.50 லட்சம் பனை விதைகள் இலக்கு; கலெக்டர்

கரூர் மாவட்டத்துக்கு 4.50 லட்சம் பனை விதைகள் இலக்கு; கலெக்டர்


ADDED : அக் 12, 2025 03:06 AM

Google News

ADDED : அக் 12, 2025 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ''கரூர் மாவட்டத்திற்கு, 4.50 லட்சம் பனை விதைகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் கூறினார்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை சொட்டை குளத்தில் வனத்-துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சியை, கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.

பின், அவர் கூறியதாவது:

ஒரு கோடி பனை விதைகள் நடும் நடும் பணி என்ற பெயரில், தமிழக அரசின் துறைகளுடன் இணைந்து தனியார் அமைப்புகள் பணியை மேற்கொள்ள உள்ளனர். காவிரி கரையில் பனை விதை நடும் பணியில், ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை காவிரி கரையின் இருபுறமும், 416 கி.மீ., தொலைவுக்கு பனை விதைகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பட்ட பனை விதைகளின் எண்ணிக்கையை கண்காணிக்கும் வகையில், உதவி செயலி மற்றும் இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. கரூர் மாவட்டத்திற்கு, 4.50 லட்சம் பனை விதைகள் நட இலக்கு நிர்-ணயிக்கப்பட்டுள்ளது. அதில், சொட்டை குளக்கரையோரத்தில், 350 பனை விதைகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் சண்முகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், உதவி இயக்குனர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us