sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் கரூர் நகரில் போலீஸ் பாதுகாப்பு

/

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் கரூர் நகரில் போலீஸ் பாதுகாப்பு

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் கரூர் நகரில் போலீஸ் பாதுகாப்பு

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் கரூர் நகரில் போலீஸ் பாதுகாப்பு


ADDED : ஏப் 24, 2025 01:30 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:காஷ்மீரில், பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக, கரூரில் உள்ள முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், பயங்கரவாதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தாக்குதல் எதிரொலியாக, தமிழகத்தில் பல நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த வகையில், கரூரில் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கரூர் ரயில்வே ஸ்டேஷனில், பயணிகளின் உடமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. கரூர் பஸ் ஸ்டாண்ட் உள்பட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு, துாப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us