sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

651 பயனாளிகளுக்கு ரூ.21.25 கோடி தாட்கோ கடன் வழங்கல்:கலெக்டர்

/

651 பயனாளிகளுக்கு ரூ.21.25 கோடி தாட்கோ கடன் வழங்கல்:கலெக்டர்

651 பயனாளிகளுக்கு ரூ.21.25 கோடி தாட்கோ கடன் வழங்கல்:கலெக்டர்

651 பயனாளிகளுக்கு ரூ.21.25 கோடி தாட்கோ கடன் வழங்கல்:கலெக்டர்


ADDED : நவ 27, 2024 01:22 AM

Google News

ADDED : நவ 27, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், நவ. 27-

தாட்கோ மூலம் மூன்று ஆண்டுகளில், 651 பயனாளிகளுக்கு, 21.25 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி அருகில், நஞ்சைகாளகுறிச்சியில் தாட்கோ மூலம் நண்ணிலம் மகளிர் நில உடமை திட்ட பயனாளிகளிடம் கருத்து கேட்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற கலெக்டர் தங்கவேல், பின்

கூறியதாவது:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம், நண்ணிலம் மகளிர் நில உடமை திட்டம், சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடன் உதவி திட்டம், கல்வி கடன் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், மாவட்டத்தில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 506 ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு, 3.47 கோடி ரூபாய் மானியத்துடன், 12.39 கோடி ரூபாய் வங்கி கடன் உதவி வழங்கப்

பட்டுள்ளது.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடன் உதவி திட்டத்தின் மூலமாக, 73 ஆதிதிராவிடர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 3.19 கோடி ரூபாய் மானியத்தில், 6.38 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மூன்று ஆண்டுகளில், 651 ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு, 7.82 கோடி மானியத்தில், 21.25 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்

பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us