/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெங்கடரமண சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்
/
வெங்கடரமண சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்
வெங்கடரமண சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்
வெங்கடரமண சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்
ADDED : பிப் 17, 2024 01:45 PM
கரூர்: தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், மாசிமக தெப்ப திருவிழா நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது.
பிரசித்தி பெற்ற, கரூர் மாவட்டம் தான் தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் தேர்த்திருவிழா, தெப்பத் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு கடந்த, 13 ல் சிறப்பு பூஜையுடன் விழாவுக்காக, பூர்வாங்க பணிகள் நடந்தது. நேற்று முன்தினம், வெள்ளி கருட சேவையில், மூலவர் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். நேற்று காலை, 9:00 மணிக்கு மாசிமக தெப்பத்திருவிழாவுக்காக கொடி யேற்ற விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
வரும், 22 ல் திருக்கல்யாண உற்வசம், 24 ல் தேர்த் திருவிழா, 26 ல் தெப்பத்தேர் உற்சவம், 27, 29 ல் வெள்ளி கருடசேவை, வரும் மார்ச், 2 ல் ஆளும் பல்லாக்கு, 3 ல் ஊஞ்சல் உற்சவம், 4 ல் புஷ்பயாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.