/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தனியார் இடங்களில் கருவேல மரங்கள் அகற்ற மெத்தனம் காட்டும் மாநகராட்சி
/
தனியார் இடங்களில் கருவேல மரங்கள் அகற்ற மெத்தனம் காட்டும் மாநகராட்சி
தனியார் இடங்களில் கருவேல மரங்கள் அகற்ற மெத்தனம் காட்டும் மாநகராட்சி
தனியார் இடங்களில் கருவேல மரங்கள் அகற்ற மெத்தனம் காட்டும் மாநகராட்சி
ADDED : ஜன 01, 2024 11:40 AM
கரூர்: தனியார் இடங்களில் கருவேல மரங்களை அகற்றும் பணியில், மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. சீமை கருவேல மரங்கள், பருவமழை பெய்ய விடாமல் தடுப்பதுடன், நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சி பூமிக்கடியில் உள்ள நீரின் அளவை குறைக்கிறது. அத்துடன் நிலத்தில் இருக்கும் நல்ல நீரை உப்புத்தண்ணீராக மாற்றிவிடுகிறது. இதனால், இந்த மரங்களை அகற்ற வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் இடங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றுவதில், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கரூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்பட்ட பகுதிகளில், 2 லட்சம் சதுர மீட்டர் அளவிலும், 933 தனியார் பிளாட்டுகளில் கருவேல மரங்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. கடந்த, 2017ல் நீதிமன்றம் உத்தரவுப்படி, மாநகராட்சி, பொதுப்பணி, நெடுஞ்சாலைக்குட்பட்ட பகுதிகளில், சம்பந்தப்பட்ட துறைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், காலப்போக்கில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டன. இதனால், வெங்கமேடு பாலம், ரயில்வே ஸ்டேஷன், ராமனுார், காந்திகிராமம், ராமகிருஷ்ணபுரம் உட்பட பல்வேறு இடங்களில் தனியார் மற்றும் அரசு இடங்களில் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைவது மட்டுமல்லாது, சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கி வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.