sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அருகே காவிரியாற்று பாலத்தின் தரைத்தளம் சேதம்

/

கரூர் அருகே காவிரியாற்று பாலத்தின் தரைத்தளம் சேதம்

கரூர் அருகே காவிரியாற்று பாலத்தின் தரைத்தளம் சேதம்

கரூர் அருகே காவிரியாற்று பாலத்தின் தரைத்தளம் சேதம்


ADDED : செப் 27, 2025 01:42 AM

Google News

ADDED : செப் 27, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர்-நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் வகையில், காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைத்தளம் சேதம் அடைந்துள்ளது.

கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில், அமராவதி ஆற்றின் குறுக்கே, பல ஆண்டுகளுக்கு முன், உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த ஒரு பாலம்தான் பயன்பாட்டில் இருந்தது. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் பழைய பாலத்தின் அருகே, புதிய பாலம் கட்டப்பட்டது. இதனால் பழைய பாலத்தில் தரைத்தளம் சேதம் அடைந்துள்ளது.

குறிப்பாக, பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து, நாமக்கல், சேலம் மாவட்டங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும், பாலத்தின் இருபக்கமும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், பெரும்பாலான மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை.எனவே, உயர்மட்ட பாலத்தில், சேதமடைந்துள்ள தரைத்தளத்தை சீரமைத்து, அனைத்து விளக்குகளையும் எரிய வைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.






      Dinamalar
      Follow us