/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நிரம்பி வழியும் ஆத்துப்பாளையம் அணை விரைவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு
/
நிரம்பி வழியும் ஆத்துப்பாளையம் அணை விரைவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு
நிரம்பி வழியும் ஆத்துப்பாளையம் அணை விரைவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு
நிரம்பி வழியும் ஆத்துப்பாளையம் அணை விரைவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு
ADDED : நவ 18, 2024 03:36 AM
கரூர்: ஆத்துப்பாளையம் அணை, நேற்று முதல் நிரம்பி வழிவதால், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என, விவசாயிகள் எதிர்-பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன், கார்வாழி ஆத்துப்பாளையம் அணை, 18 ஆண்டுகளுக்கு பின், கடந்த, 2019 நவ., ரம்பியது. இதையடுத்து, பாசனத்துக்காக நொய்யல் வாய்க்காலில், தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோல் கடந்த, 2020, 2021ல் அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்ததால், பாசனத்-துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த, 15 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து துவங்கியது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்-படி, அணைக்கு வினாடிக்கு, 25 கன அடி தண்ணீர் வந்தது. மேலும், 26.90 அடி உயரம் கொண்ட அணை, நேற்று அதிகாலை நிரம்பியது. உபரிநீர் அணையில் இருந்து, வாய்க்காலில் வெளியே-றியது. இதனால், விரைவில் அணை நிரம்ப வாய்ப்புள்ளதால், பாசனத்துக்காக நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என, விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஆத்துப்பாளையம் அணை மூலம், க.பரமத்தி, கரூர் பஞ்., யூனியன் பகுதிகளில், 19,00 ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறு-கிறது. ஆத்துப்பாளையம் அணை நிரம்பியதை அறிந்த, பொது-மக்கள் நேற்று அணையை பார்வையிட குவிந்தனர்.