sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அடிப்படை வசதிகள் செய்து தரணும் கணபதி நகர் மக்கள் எதிர்பார்ப்பு

/

அடிப்படை வசதிகள் செய்து தரணும் கணபதி நகர் மக்கள் எதிர்பார்ப்பு

அடிப்படை வசதிகள் செய்து தரணும் கணபதி நகர் மக்கள் எதிர்பார்ப்பு

அடிப்படை வசதிகள் செய்து தரணும் கணபதி நகர் மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : மார் 29, 2025 07:14 AM

Google News

ADDED : மார் 29, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் நகரின் மையப்பகுதியில், மழை காலங்களில் மழை நீர் மற்றும் சாக்கடை கழிவு நீர் பல நாட்களாக தேங்கும் அவல நிலை உள்ளது.

கரூர் மாநகராட்சி, சுங்க கேட் அருகே கணபதி நகர், கலைஞர் நகரில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகு-தியில் மழைநீருடன், வீடுகளில் இருந்து கழிவு நீர் தேங்குகிறது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: கணபதி நகர், கலைஞர் நகர் பகுதியில், தார் சாலை இல்லை. மண் சாலையில்தான் வீடுக-ளுக்கு நடந்து செல்ல வேண்டும். மழை காலங்களில் குழந்தைகள், பெரியவர்கள் வீட்டை வெளியே செல்ல முடியாது. பல ஆண்டுகளாக தார்சாலை போட, கோரிக்கை வைத்தும் பயன் இல்லை.போதிய சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கும். இதனால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. தேங்கிய நீரில் இருந்து பாம்பு உள்-ளிட்ட விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வருகிறது. பிரதான சாலையில் இருந்து, கணபதி நகருக்கு செல்ல புதிதாக, அமைக்-கப்பட்ட பிளாட்பாரம் தடையாக உள்ளது.இதனால், அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலங்களில், புகுந்து வீடுகளுக்கு செல்கிறோம். இதனால், சுங்க கேட் பிரதான சாலையில் இருந்து, கணபதி நகருக்கு செல்ல சாலை வசதி வேண்டும். மின் கம்பங்களில் விளக்குகள் எரிவது இல்லை.இவ்வாறு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us