ADDED : டிச 20, 2024 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், டிச. 20-
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள, மானாவாரி நிலங்களில் உளுந்து சாகுபடி பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வருகிறது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலுார், சரவணபுரம், புனவாசிப்பட்டி, மேட்டுப்பட்டி, வேங்காம்பட்டி, சிவாயம், இரும்பூதிப்பட்டி, குழந்தைப்பட்டி, வரகூர், கணக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மானாவாரி நிலங்களில், 50 ஏக்கர் பரப்பளவில் உளுந்து சாகுபடி செய்து வருகின்றனர். மானாவாரி பயிர்களுக்கு மழை நீர் கிடைத்ததால், உளுந்து பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வருகிறது. உளுந்து சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கிறது.