/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சுக்காலியூர் ரவுண்டானா பாலத்தின் கீழ் பகுதியில் குண்டும், குழியுமான சாலை
/
சுக்காலியூர் ரவுண்டானா பாலத்தின் கீழ் பகுதியில் குண்டும், குழியுமான சாலை
சுக்காலியூர் ரவுண்டானா பாலத்தின் கீழ் பகுதியில் குண்டும், குழியுமான சாலை
சுக்காலியூர் ரவுண்டானா பாலத்தின் கீழ் பகுதியில் குண்டும், குழியுமான சாலை
ADDED : ஜூலை 14, 2025 04:21 AM
கரூர்: கரூர் மாவட்டம், சுக்காலியூர் பகுதியில் திருச்சி, சேலம் மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சாலைகள் இணைகின்றன. இதனால், அப்-பகுதியில் வாகனங்கள் செல்லும் வகையில், ரவுண்டான மற்றும் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.
உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதிகளில், சாலை சேதமடைந்து பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. திருச்சியில் இருந்து சேலம் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகன ஓட்டி களும், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, திருச்சி செல்லும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரப்படுகின்றனர்.மேலும், அப்பகுதியில் போதிய விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்கிறவர்களும், சாலையில் உள்ள குழி-களில் தவறி விழுந்து காயமடைகின்றனர்.
சுக்காலியூர் ரவுண்டானா உயர் மட்ட பாலத்தின் கீழ் பகுதிகளில் உள்ள, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

