ADDED : மே 19, 2025 01:49 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த தோகைமலையில் உள்ள குறிஞ்சி நகரில் பகவதி அம்மன் கோவிலும், வெள்ளப்பட்டியில் மகா மாரி-யம்மன் கோவிலும் அமைந்துள்ளது.
இக்கோவில்களில், அக்னி நட்சத்திரத்தையொட்டி, ஆண்டு-தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, குறிஞ்சி-நகர் பகவதி அம்மன், மகா மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது. குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக்-குடம் எடுத்த பக்தர்கள், தோகைமலை குறிஞ்சி நகரில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர். பின், வெள்ளப்பட்டி மகா மாரியம்மன், பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு அபி-ஷேகம் நடந்தது.தொடர்ந்து, பகவதி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், பால்குடம்,
தீச்சட்டி, பால் காவடி, பறவை காவடி, சிலா போடுதல், கரும்பு தொட்டில் எடுத்து, பக்தர்கள் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தனர். பின், அங்கு அமைக்-கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன்
செலுத்தினர்.
இதில், தோகைமலை, தெலுங்குபட்டி, நாகனுார், கழுகூர், கல்-லடை, கூடலுார், பாதிரிபட்டி, வடசேரி பஞ்., பகுதியை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.