/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புலியூரில் பஸ் ஸ்டாப் இல்லை பொதுமக்கள் கடும் அவதி
/
புலியூரில் பஸ் ஸ்டாப் இல்லை பொதுமக்கள் கடும் அவதி
ADDED : ஏப் 14, 2024 08:07 AM
கரூர் : கரூர்--திருச்சி சாலையில் புலியூர் டவுன் பஞ்சாயத்து உள்ளது. அந்த பகுதியில், தனியார் சிமென்ட் ஆலை, தனியார் பொறியியல் கல்லுாரி, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல, புலியூர் பஸ் ஸ்டாப்பில் இருந்து பஸ் ஏறி செல்ல வேண்டும். அதே போல், கரூர் நகர பகுதிக்கு செல்லும் பொதுமக்களும், பஸ் ஏறி செல்ல வேண்டும்.
ஆனால், புலியூர் பஸ் ஸ்டாப்பின் இரண்டு பகுதிகளிலும் நிழற்கூடம் இல்லாததால், கொளுத்தும் வெயிலிலும், கொட்டு மழையிலும் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, புலியூர் பஸ் ஸ்டாப்பில், பயணிகள் நிழற்கூடம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

