/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திருக்குறள் தொடர்பான போட்டி வரும் 27 ல் துவக்கம்: கலெக்டர்
/
திருக்குறள் தொடர்பான போட்டி வரும் 27 ல் துவக்கம்: கலெக்டர்
திருக்குறள் தொடர்பான போட்டி வரும் 27 ல் துவக்கம்: கலெக்டர்
திருக்குறள் தொடர்பான போட்டி வரும் 27 ல் துவக்கம்: கலெக்டர்
ADDED : டிச 23, 2024 10:00 AM
கரூர்: மாவட்ட மைய நுாலகத்தில், திருக்குறள் தொடர்பான பல்வேறு போட்டிகள் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரியில், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த, 2000ம் ஆண்டு நிறுவப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, வெள்ளி விழா கொண்டாடும் வகையில், திருக்குறள் தொடர்பான கருத்தரங்கம், ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப் போட்டி, வினாடி-வினா போட்டி கரூர் மாவட்ட மைய நுாலகத்தில் நடக்கிறது.
இதில் டிச., 27ல் பேச்சுப் போட்டி, 30ல் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, 31ல் வினாடி-வினா போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்புவோர், தங்களது பெயரை கரூர் மாவட்ட மைய நுாலகத்தில் நேரிலோ அல்லது 04324 263550 என்ற தொலைபேசி எண்ணிலோ வரும், 24க்குள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.