/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசியல்வாதிகளால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு திருத்தொண்டர் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
/
அரசியல்வாதிகளால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு திருத்தொண்டர் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
அரசியல்வாதிகளால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு திருத்தொண்டர் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
அரசியல்வாதிகளால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு திருத்தொண்டர் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
ADDED : நவ 21, 2025 02:55 AM
கரூர், ''கரூர் வெண்ணைமலையில், அரசியல்வாதிகள் போலியான வாக்குறுதி அளித்து, சட்ட ஒழுங்கு சீர்கேட்டை உருவாக்கி வருகின்றனர்,'' என, திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கரூர் அருகே, வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களை மீட்க கோரி, திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர், பாதிக்கப்பட்ட மக்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அலுவலகத்திற்கு, திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் நேற்று வந்தார். தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், அவரது காரை முற்று
கையிட்டு போராட்டம் நடத்தினர். கோவில் அலுவலகத்தை பெண்கள் உள்பட பொதுமக்கள் சூழ்ந்து கொண்டனர். பின், ஹிந்து சமய அறநிலையத்துறை கரூர் உதவி ஆணையர் ரமணிகாந்தன் முன்னிலையில், அவருடன் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் கோவி
லுக்கு சொந்தமான இடங்கள் உள்பட சொத்துக்களை மீட்க, சட்டப்படியான நடவடிக்கையில், 2011 முதல் மேற்கொண்டு வருகிறேன். 2012ல், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்கள் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 2018ல், உயர்நீதி-மன்றத்தில் வழக்கை தொடர்ந்த போது, 200க்கும் மேற்பட்டவர்கள் எனக்கு எதிராக வாதாடினர். அதன் அடிப்படையில், 2019ல், கோவில் இடங்களை மீட்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பிறகு, மூன்று ஆண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், 2024ல் உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உத்தரவுகளை நீதிமன்றம் வழங்கி வருகிறது. நீதிமன்றத்தில் முறையிடாமல், அரசியல்வாதிகள் மக்களை துாண்டி விட்டு வருகின்றனர். இதற்கு உள்ளூர் மக்கள் பலிகடா ஆகக்கூடாது. கோவிலுக்கு சொந்தமான இடம் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த இடங்களில், குறைந்தபட்ச வாடகை செலுத்தினால், வாடகைதாரராக மாறி விடலாம் என, 2014 முதல் கூறி வருகிறேன். ஆனால், அரசியல்வாதிகள் போலியான வாக்குறுதிகளை, பொதுமக்களுக்கு அளித்து சட்ட ஒழுங்கு சீர்கேட்டை உருவாக்கி உள்ளனர்.
மாறி, மாறி ஆட்சிக்கு வந்தவர்கள் இப்பிரச்னையை தீர்க்கவில்லை. அதற்கு பதில், மக்களிடம் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தினர். ஹிந்து சமய அறநிலையத்துறை
யின், 109 சட்டத்தின் கீழ். கோவில் சொத்துகளை மீட்க எந்த காலவரையும் கிடையாது என்பது சட்டமாகும். இந்த இடங்களை பிளாட் போட்டு விற்றவர்கள் தான், போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில், சட்டத்திற்கு உட்பட்டு உதவி செய்கிறேன் என்று தெரிவித்திருக்கிறேன். பல்வேறு காரியங்களுக்கு வழங்கப்பட்ட இடங்களே இனாம் நிலமாகும். 2018ம் ஆண்டில் முதல் இனாம் நிலம் பட்டா ரத்து செய்யப்பட்டு, கோவில்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கை, இந்த கோவிலில் எடுக்கவில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.

