/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பணம் வைத்து சூதாட்டம் மூன்று பேர் கைது
/
பணம் வைத்து சூதாட்டம் மூன்று பேர் கைது
ADDED : ஜூன் 30, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் போலீஸ் எஸ்.ஐ., லட்சுமி உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம், காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக ஆண்டாங்-கோவில் பகுதியை சேர்ந்த கோகுல், 26; கவின்ராஜ், 19; கணேசன், 23; ஆகிய மூன்று பேரை, பசுபதிபாளையம் போலீசார் கைது செய்தனர்.