sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் மாஜி காதலியை கொலை செய்ய திட்டமிட்ட காதலன் உட்பட மூவர் கைது

/

கரூரில் மாஜி காதலியை கொலை செய்ய திட்டமிட்ட காதலன் உட்பட மூவர் கைது

கரூரில் மாஜி காதலியை கொலை செய்ய திட்டமிட்ட காதலன் உட்பட மூவர் கைது

கரூரில் மாஜி காதலியை கொலை செய்ய திட்டமிட்ட காதலன் உட்பட மூவர் கைது


ADDED : ஜன 22, 2025 02:30 AM

Google News

ADDED : ஜன 22, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:சிவகங்கை மாவட்டம், சூசையார்பட்டினத்தை சேர்ந்தவர் சிவசங்கர், 24. இவர், திருச்சி மாவட்டம், வையம்பட்டியை சேர்ந்த, 19 வயது பெண்ணை, ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த பெண் கரூரைச் சேர்ந்த வாலிபருடன் சமீபத்தில் திருமணம் ஆனது. இதனால் அந்த பெண்ணையும், அவருடைய கணவரையும் கொலை செய்ய, சிவசங்கர் திட்டமிட்டார்.

அதற்காக, கரூர் அருகே தான்தோன்றிமலை சுங்ககேட் பகுதியில் உள்ள, தனியார் விடுதியில் கடந்த, 19ல், சிவசங்கர் அறை எடுத்து தங்கியுள்ளார். அவருக்கு துணையாக மதுரையை சேர்ந்த ஆனந்த், 38, திண்டுக்கல்லை சேர்ந்த ஹரிஹரன், 20, ஆகியோரும் தங்கினர். மூன்று பேரின் நடவடிக்கைகளில், சந்தேகமடைந்த தனியார் விடுதி மேலாளர் தான்தோன்றிமலை போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு போலீசார், தனியார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சிவசங்கர் தங்கியிருந்த அறையில் இருந்து ஒரு வெட்டுக்கத்தி, ஒரு கூரிக்கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். பிறகு நடத்திய விசாரணையில், ஒரு தலையாய் காதலித்த பெண் மற்றும் அவரது கணவரை கொலை செய்ய, நண்பர்கள் இருவருடன் சிவசங்கர், விடுதியில் தங்கியிருந்தது தெரிந்தது.

இதையடுத்து சிவசங்கர், அவரது நண்பர்கள் ஆனந்த், ஹரிஹரன் ஆகியோரை, தான்தோன்றிமலை போலீசார் கைது செய்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us