sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சரக்கு லாரி-கார் மோதிய விபத்தில் மூவர் படுகாயம்

/

சரக்கு லாரி-கார் மோதிய விபத்தில் மூவர் படுகாயம்

சரக்கு லாரி-கார் மோதிய விபத்தில் மூவர் படுகாயம்

சரக்கு லாரி-கார் மோதிய விபத்தில் மூவர் படுகாயம்


ADDED : ஜன 22, 2025 07:15 AM

Google News

ADDED : ஜன 22, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: சின்னதாராபுரம் அருகே, சரக்கு லாரி - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில், மூவர் படுகாயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே சிங்களாந்தபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ், 34. இதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் ரஞ்சித்குமார், 17. இவரது தாய் பெரியக்காள், 45. இவர்கள் மூவரும், மாருதி ஆல்டோ காரில் கரூரிலிருந்து, சின்னதாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். சூடாமணி பஸ் நிறுத்தம் அருகே கார் சென்றபோது, எதிரே விருதுநகர் மாவட்டம், நாகலாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த பொன்ராஜ், 34, என்பவர் வேகமாக ஓட்டி வந்த சரக்கு லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த, மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அனைவரையும் மீட்டு, கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.விபத்து குறித்து, சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us