sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

'பிட் இந்தியா' திட்டத்தில் சைக்கிள் பயணம் டி.என்.பி.எல்., பணியாளருக்கு பாராட்டு

/

'பிட் இந்தியா' திட்டத்தில் சைக்கிள் பயணம் டி.என்.பி.எல்., பணியாளருக்கு பாராட்டு

'பிட் இந்தியா' திட்டத்தில் சைக்கிள் பயணம் டி.என்.பி.எல்., பணியாளருக்கு பாராட்டு

'பிட் இந்தியா' திட்டத்தில் சைக்கிள் பயணம் டி.என்.பி.எல்., பணியாளருக்கு பாராட்டு


ADDED : நவ 17, 2025 04:01 AM

Google News

ADDED : நவ 17, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: 'பிட் இந்தியா' திட்டத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை-யிலான சைக்கிள் பயணம் மேற்கொண்ட, புகழூர் டி.என்.பி.எல்., பணியாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின், 'பிட் இந்தியா' திட்டத்தின் கீழ், சர்தார் வல்ல-பபாய் படேலின், 150-வது பிறந்த நாளை முன்னிட்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான சைக்கிள் பயணம் நடக்கிறது.

இந்த பயணம், 2025 அக்., 31 ஸ்ரீநகரில் தொடங்கி, பஞ்சாப், டில்லி, ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநி-லங்கள் வழியாக பயணித்து, நேற்று தமிழகத்தில், கன்னியாகும-ரியில் முடிவடைந்தது. இப்பயணத்தில், கரூர் மாவட்ட புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையின் பேப்பர் மெஷின் உற்-பத்தி பிரிவில் பணிபுரியும் உதவி மேலாளர் ஸ்ரீசவுந்தரப்பிரியன் கலந்துகொண்டு, 4,249 கி.மீ., துாரம் சைக்கிள் ஓட்டுதல் பய-ணத்தை வெற்றிகரமாக முடித்தார். அதில், 150 பேர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று முன்தினம், கரூர் மாவட்டம், புகழூர் வழியாக சென்ற இவர்களை கவுரவிக்கும் விதமாக, காகித ஆலையில் அனைவருக்கும் மதிய உணவு வழங்-கப்பட்டது. அப்போது, காகித ஆலையின் முதன்மை பொது மேலாளர் (மனித வளம்) கலைச்செல்வன் பாராட்டி வாழ்த்து

தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us