/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இன்று காவிரி, குண்டாறு இணைப்பு; இழப்பீட்டு தொகை முகாம்
/
இன்று காவிரி, குண்டாறு இணைப்பு; இழப்பீட்டு தொகை முகாம்
இன்று காவிரி, குண்டாறு இணைப்பு; இழப்பீட்டு தொகை முகாம்
இன்று காவிரி, குண்டாறு இணைப்பு; இழப்பீட்டு தொகை முகாம்
ADDED : ஆக 28, 2024 07:42 AM
கரூர்: காவிரி, வைகை, - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட பணிகளுக்கு, நிலம் கையகப்படுத்துதலில் இழப்பீட்டு தொகை தொடர்பாக முகாம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில், காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட பணிகளுக்காக, நிலம் கையகப்படுத்துதலில் இழப்பீட்டு தொகை தொடர்பாக முகாம் நடக்கிறது. இதன்படி இன்று, (28ம் தேதி) கீழ்கண்ட இடங்களில் இழப்பீடு தொகை தொடர்பாக முகாம் நடக்கும் இடம்:
கோட்டைமேடு சமுதாய கூடத்தில், நெய்தலுார் தெற்குக்கு உட்பட்ட கிராமங்களுக்கும், திம்மம்பட்டி கிராம ஊராட்சி சேவை கட்டிடத்தில், சத்தியமங்கலத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கும், கிருஷ்ணராயபுரம் தனி தாசில்தார் அலுவலகத்தில், கிருஷ்ணராயபுரம் தெற்குக்கு உட்பட்ட கிராமங்களுக்கு நடக்கிறது. இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

