/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க டோக்கன் வினியோகம்
/
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க டோக்கன் வினியோகம்
ADDED : ஜன 06, 2026 06:43 AM

கரூர்: கரூரில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.தமிழகத்தில், பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட ஏதுவாக, பொங்கல் பரிசு தொகுப்பு, 3,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்-துள்ளார்.
அதன்படி, கரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கி உள்ளது.மாவட்டத்தில் உள்ள, 728 ரேஷன் கடைகளில், 3.39 லட்சத்-துக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகள் உள்ளன. பயனாளி-களின் வீடுகளுக்கு சென்று டோக்கன் வினியோகிக்கும் பணி-களில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பயனாளிகளுக்கு வழங்கப்-பட்டு வரும் டோக்கனில், அவருக்கு பொங்கல் பரிசு தொகை பெறும் நேரம், தேதியுடன் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், ரேஷன் கடையின் பெயர், ரேஷன் அட்டைதாரர் பெயர், அட்டை எண், தெரு, டோக்கன் எண் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்-றுள்ளன.
அதில் குறிப்பட்ட விவரங்களை பின்பற்றி, உரிய தேதியில், உரிய நேரத்தில் பயனாளிகள் பொங்கல் பரிசை பெற்றுக் கொள்-ளலாம். பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே அனைத்து பயனாளிக-ளுக்கும் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத்தை அளிக்க நடவடிக்-கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருகின்றன. வரும், 8 முதல் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது.

