ADDED : ஜன 06, 2026 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: வயலுாரில் உள்ள கால்நடைகளுக்கு, தடுப்பூசி போடப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வயலுார், சரவணபுரம், கோடங்கிப்பட்டி ஆகிய கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் பசு, எருமை போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.தற்போது பனிக்காலம் என்பதால், கால்நடைக-ளுக்கு நோய் தாக்குதல் அபாயம் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில், கால்நடைத்துறை சார்பில் 8வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
அதன்படி வயலுார் கால்நடை மருந்தகம் சார்பில் கால்நடைத்-துறை மருத்துவர்கள் வயலுார், கோடங்கிப்பட்டி, சரவணபுரம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வளர்த்து வரும் பசு மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர்.நுாற்றுக்கும் மேற்பட்ட பசு மாடுகளை விவசாயிகள் அழைத்து வந்தனர்.

