sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி

/

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி


ADDED : மார் 06, 2024 02:19 AM

Google News

ADDED : மார் 06, 2024 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், கரூர் மார்க்கெட்டுக்கு தக்காளி அதிகளவில் விற்பனைக்கு வருகிறது. இதனால் விலை குறைந்து, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்தாண்டு, டிசம்பர் மாதம் மழை பெய்தது. இதனால், குறுகிய கால பயிரான தக்காளியை விவசாயிகள், அதிகளவில் சாகுபடி செய்தனர். இதனால், மாநிலம் முழுவதும் தக்காளி நல்ல விளைச்சல் அடைந்துள்ளது.

குறிப்பாக, கரூர் மாவட்டத்துக்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், திருப்பூர் மாவட்டம் பல்லடம், பொங்கலுார் மற்றும் மதுரை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தக்காளி வரத்து அதிகமானதால், விலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், ஒரு கிலோ தக்காளி, 40 ரூபாய் வரை விற்றது.

வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று, கரூர் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி, 12 முதல், 15 ரூபாய் வரை விற்றது.

மற்ற மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ, 18 ரூபாய்க்கு விற்றது. தக்காளி விலை குறைவால், இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியும், விவசாயிகளுக்கு கவலையும் ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us