/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொழிலாளியிடம் பணம் பறித்த திருநங்கை கைது
/
தொழிலாளியிடம் பணம் பறித்த திருநங்கை கைது
ADDED : ஜூன் 30, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூரில், ஓட்டல் தொழிலாளியிடம் கத்தியை காட்டி, பணம் பறித்த திருநங்கையை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், தென்னிலை கார்வாழி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், 24; ஓட்டல் தொழிலாளி. இவர் கடந்த, 27ம் தேதி இரவு கரூர், 80 அடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த திரு-நங்கை ராகவி, 28; என்பவர், குணசேகரனிடம் கத்தியை காட்டி மிரட்டி, 500 ரூபாயை பறித்து கொண்டு ஓடி விட்டார்.
இதுகுறித்து, குணசேகரன் கொடுத்த புகார்படி, திருநங்கை ராக-வியை, கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.