/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தலைவி மீதான புகார் திருநங்கையர் வாபஸ்
/
தலைவி மீதான புகார் திருநங்கையர் வாபஸ்
ADDED : அக் 14, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், பபிதா ரோஸ் தலைமையில் திருநங்கைகள், திருநம்பிகள் நேற்று மனு வழங்கி கூறியதாவது: தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மூலம், ஈரோடு மாவட்ட திருநங்கைகள் தலைவியாக, பெரிய வீடு ராதிகா நாயக் நியமிக்கப்பட்டார்.
இது தொடர்பாக சில திருநங்கைகள், அப்போது அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். இதுபற்றி போலீஸில் புகார் செய்யப்பட்டது.
தற்போது நாங்கள் இணைந்து பேசி, அவரையே ஒருமனதாக தலைவராக ஏற்க முடிவு செய்துள்ளோம். அப்புகார் மனு மீது நடவடிக்கை வேண்டாம். இவ்வாறு கூறினர்.