/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சுகாதார நிலையம் முன்புறம்பயணிகள் நிழற்கூடம் தேவை
/
சுகாதார நிலையம் முன்புறம்பயணிகள் நிழற்கூடம் தேவை
ADDED : மார் 03, 2024 01:11 AM
கரூர்;கரூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையம் முன், நிழற்கூடம் இல்லாததால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.
கரூர்
மாவட்டம், கருப்பம்பாளையம் பஞ்சாயத்து, அப்பிபாளையம் சாலையில்,
ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அதில், சுற்று வட்டார
பகுதிகளில், 25க்கும் மேற்பட்ட குக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள்
பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற செல்கின்றனர்.
ஆனால், ஆரம்ப
சுகாதார நிலையம் முன் நிழற்கூடம் இல்லாததால், பொதுமக்கள்,
குழந்தைகள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர். பஸ்சுக்காக வெயில்,
மழைக்காலங்களில் ஒதுங்க இடம் இல்லாமல், அருகில் உள்ள வீடுகளில் தஞ்சம்
புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், கருப்பம்பாளையம் ஆரம்ப
சுகாதார நிலையம் முன், பயணிகள் நிழற்கூடம் அமைக்க, கரூர் மாவட்ட
நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

