/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வழிகாட்டி போர்டுகளை மறைக்கும் மரங்கள்: திணறும் வாகன ஓட்டிகள் கரூர், டிச. 18- கரூர் மற்றும் சுற்று வட்டார சாலைகளில், வழிகாட்டி போர்டுகளை மரக்கிளைகள் மறைத்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கரூர் மாநகரை சுற்றி சேலம், திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சாலைகளும், கோவை மற்றும் ஈரோடு, திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலைகளும் செல்கிறது. அதில், முக்கிய பிரிவுகளில் நெடுஞ்சால
/
வழிகாட்டி போர்டுகளை மறைக்கும் மரங்கள்: திணறும் வாகன ஓட்டிகள் கரூர், டிச. 18- கரூர் மற்றும் சுற்று வட்டார சாலைகளில், வழிகாட்டி போர்டுகளை மரக்கிளைகள் மறைத்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கரூர் மாநகரை சுற்றி சேலம், திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சாலைகளும், கோவை மற்றும் ஈரோடு, திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலைகளும் செல்கிறது. அதில், முக்கிய பிரிவுகளில் நெடுஞ்சால
வழிகாட்டி போர்டுகளை மறைக்கும் மரங்கள்: திணறும் வாகன ஓட்டிகள் கரூர், டிச. 18- கரூர் மற்றும் சுற்று வட்டார சாலைகளில், வழிகாட்டி போர்டுகளை மரக்கிளைகள் மறைத்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கரூர் மாநகரை சுற்றி சேலம், திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சாலைகளும், கோவை மற்றும் ஈரோடு, திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலைகளும் செல்கிறது. அதில், முக்கிய பிரிவுகளில் நெடுஞ்சால
வழிகாட்டி போர்டுகளை மறைக்கும் மரங்கள்: திணறும் வாகன ஓட்டிகள் கரூர், டிச. 18- கரூர் மற்றும் சுற்று வட்டார சாலைகளில், வழிகாட்டி போர்டுகளை மரக்கிளைகள் மறைத்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கரூர் மாநகரை சுற்றி சேலம், திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சாலைகளும், கோவை மற்றும் ஈரோடு, திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலைகளும் செல்கிறது. அதில், முக்கிய பிரிவுகளில் நெடுஞ்சால
ADDED : டிச 18, 2024 01:54 AM
வழிகாட்டி போர்டுகளை மறைக்கும்
மரங்கள்: திணறும் வாகன ஓட்டிகள்
கரூர், டிச. 18-
கரூர் மற்றும் சுற்று வட்டார சாலைகளில், வழிகாட்டி போர்டுகளை மரக்கிளைகள் மறைத்துள்ளதால், வாகன ஓட்டிகள்
அவதிப்படுகின்றனர்.
கரூர் மாநகரை சுற்றி சேலம், திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சாலைகளும், கோவை மற்றும் ஈரோடு, திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலைகளும் செல்கிறது. அதில், முக்கிய பிரிவுகளில் நெடுஞ்சாலை துறை சார்பில், ஊர் பெயர்கள், கிலோ மீட்டர் விபரம், செல்ல வேண்டிய வழி ஆகியவை குறித்த தகவல்கள் வழிகாட்டி போர்டுகளில் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், பல சாலைகளில் வழிகாட்டி போர்டுகளை, மரக்கிளைகள் வளர்ந்து மறைத்துள்ளது. இதனால், வெளி மாநில லாரி ஓட்டுனர்கள், சுற்றுலா பஸ், வேன் மற்றும் கார் டிரைவர்கள் வழிகாட்டி போர்டுகளில் உள்ள தகவல்களை படிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். குறிப்பாக, கரூர்-திருச்சி சாலை சுங்ககேட் பிரிவு பகுதியில், ஊர் பெயர்கள் கொண்ட போர்டுகளில், மரக்கிளைகள் வளர்ந்துள்ளதால் மறைந்துள்ளது. எனவே, தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள, வழிகாட்டி போர்டுகளை மறைக்காத வகையில், மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.