/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் பூட்டிய நிலையில் புறக்காவல் நிலையங்களால் சிக்கல்
/
கரூரில் பூட்டிய நிலையில் புறக்காவல் நிலையங்களால் சிக்கல்
கரூரில் பூட்டிய நிலையில் புறக்காவல் நிலையங்களால் சிக்கல்
கரூரில் பூட்டிய நிலையில் புறக்காவல் நிலையங்களால் சிக்கல்
ADDED : அக் 08, 2024 04:06 AM
கரூர்: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பெரும்பாலான புறக்-காவல் நிலையங்கள் பூட்டிய நிலையில் உள்ளது. இதனால் பொது மக்கள், பாதுகாப்புடன் பொருட்களை வாங்கி செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில், குற்றச்செயல்களை தடுக்கவும், பொது-மக்கள் எளிதில் புகார் தெரிவிக்கவும், 10 க்கும் மேற்பட்ட இடங்-களில் புறக் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டது. குறிப்பாக, மாவட்ட எல்லை பகுதி மட்டுமின்றி, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கண்டறியப்பட்ட, முக்கிய இடங்களிலும் புறக்-காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டது. அதில், ஷிப்ட் முறையில் போலீசார் பணியில் இருந்தனர்.இந்நிலையில், வெளியூர் பாதுகாப்பு பணி, உள்ளூருக்கு முக்கிய பிரமுகர் வரும் போது பாதுகாப்பு பணி, நீதிமன்ற பணி, உள்ளூர் பிரச்னையாகும் இடத்தில் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்-களால், புறக்காவல் நிலையங்களில் போலீசாரை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பல புறக்காவல் நிலையங்கள் நிரந்-தரமாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
வரும், 31ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால், கரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம், காட்டு-புத்துார், திண்டுக்கல், ஈரோடு மாவட்டம் உள்ளி ட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள், கரூர் நகருக்கு பல பொருட்களை வாங்க வர துவங்கியுள்ளனர்.
ஆனால், பல புறக்காவல் நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதாலும், சில புறக்காவல் நிலையங்கள் திறந்திருந்தாலும் போலீசார் இல்-லாத நிலை உள்ளது. குறிப்பாக, கரூர் பஸ் ஸ்டாண்டில், போலீசார் பெரும்பாலும் பணியில் இருப்பது இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.
கரூர் ஜவஹர் பஜார், கோவை சாலை, தின்னப்பா கார்னர் சாலையில், ஜவுளி, தங்கநகை கடை உள்ளிட்ட வர்த்தக நிறுவ-னங்கள் அதிகம் உள்ளது. வழக்கமாக, தீபாவளி பண்டிகையின் போது, ஜவஹர் பஜாரில் உயர்மட்ட கண்காணிப்பு கோபுரம் அமைத்து, எல்.இ.டி., திரை மூலம் முன்கூட்டியே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.
ஆனால், தீபாவளி பண்டிகைக்கு இன்னும், 23 நாட்களே உள்ள நிலையில், போலீசார் சிறப்பு கண் காணிப்பு பணியை துவக்க-வில்லை. மேலும், பல பகுதிகளில் புறக்காவல் நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதால், வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்-களில் சமூக விரோதிகள் ஈடுபட கூடும். இதனால், புறக்காவல் நிலையங்களில் போலீசாரை பணிக்கு அமர்த்தி, கண்காணிப்பு பணியை துவக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்-றனர்.