/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தி.மு.க., பிரமுகர் வீட்டில் தேங்காய் திருடிய இருவர் கைது
/
தி.மு.க., பிரமுகர் வீட்டில் தேங்காய் திருடிய இருவர் கைது
தி.மு.க., பிரமுகர் வீட்டில் தேங்காய் திருடிய இருவர் கைது
தி.மு.க., பிரமுகர் வீட்டில் தேங்காய் திருடிய இருவர் கைது
ADDED : டிச 23, 2024 10:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் நகர தி.மு.க., செயலாளர் ரவிச்சந்திரன், 69. இவருக்கு பணிக்கம்பட்டியில் தென்னந்தோப்பு உள்ளது. நேற்று காலை, 10:00 மணியளவில் தென்னந்தோப்பில், மேட்டுமருதுார் கிராமத்தை சேர்ந்த அஜித், 23, சின்னவர், 25, ஆகியோர் திருட்டுத்தனமாக தேங்காய்களை திருடினர். தட்டிக்கேட்ட ரவிச்சந்திரனை தகாத வார்த்தையில் திட்டினர்.
இது குறித்து, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து, இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர்.