தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/இரு பைக்குகள் திருட்டு: ஒருவர் கைது

இரு பைக்குகள் திருட்டு: ஒருவர் கைது

இரு பைக்குகள் திருட்டு: ஒருவர் கைது


ADDED : மே 05, 2024 02:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 05, 2024 02:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூர், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், பைக்குகளை திருடியதாக, ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல், 28; இவர் கடந்த, 1ல் கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், பஜாஜ் பிளாட்டினம் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். அதை காணவில்லை. அதேபோல், தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்த ரமேஷ், 35; என்பவர் கடந்த, 2 ல் பஜாஜ் டிஸ்கவர் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். அதையும் காணவில்லை. இது குறித்து, பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அப்போது, இரண்டு பைக்குகளை திண்டுக்கல் மாவட்டம், சின்னமந்தை பகுதியை சேர்ந்த பாலமுருகன், 36; என்பவர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us