/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உயர்மட்ட கம்பத்தில் எரியாத மின் விளக்குகள்
/
உயர்மட்ட கம்பத்தில் எரியாத மின் விளக்குகள்
ADDED : நவ 07, 2024 01:19 AM
உயர்மட்ட கம்பத்தில்
எரியாத மின் விளக்குகள்
கரூர், நவ. 7-
கரூர் அருகே சுக்காலியூர்
ரவுண்டானாவில், கோவை சாலை, திருச்சி சாலை, கோவை சாலை மற்றும் கரூர் நகர சாலைகள் பிரியும் இடத்தில், உயர்மட்ட கம்பத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆனால், அதில் உள்ள பெரும்பாலான விளக்குகள் எரிவது இல்லை. மேலும், ரவுண்டானாவை சுற்றி அமைக்கப்பட்டுள்ள, மின் கம்பங்களிலும், முழுமையாக விளக்குகள் எரிவது இல்லை. இதனால், சுக்காலியூர் ரவுண்டானா பகுதி இரவு நேரத்தில் இருளில் மூழ்கியுள்ளது.உயர்மட்ட கோபுரத்தில் மின் விளக்குகள் சரிவர எரியாததால், விபத்துக்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. எனவே, மின் விளக்குகளை இரவு நேரத்தில் எரியும் வகையில், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.