/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உப்பிடமங்கலம் மாட்டு சந்தை ரூ.65 லட்சத்துக்கு ஏலம்்
/
உப்பிடமங்கலம் மாட்டு சந்தை ரூ.65 லட்சத்துக்கு ஏலம்்
உப்பிடமங்கலம் மாட்டு சந்தை ரூ.65 லட்சத்துக்கு ஏலம்்
உப்பிடமங்கலம் மாட்டு சந்தை ரூ.65 லட்சத்துக்கு ஏலம்்
ADDED : ஆக 01, 2025 01:25 AM
கரூர், உப்பிடமங்கலம், மாட்டு சந்தை, ரூ.65 லட்சத்துக்கு ஏலம் போனது.
உப்பிடமங்கலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை மாட்டு சந்தை, ஞாயிற்றுக்கிழமை காய்கறி சந்தை நடக்கிறது. மாட்டு சந்தையில் கோவை, பொள்ளாச்சி, கரூர், இடைப்பாடி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். திருச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் கேரளா மாநில வியாபாரிகள் மாடுகளை வாங்க வருவர்.
உப்பிடமங்கலம் டவுன் பஞ்., சார்பில், மாட்டுச்சந்தை பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரலில் சுங்கம் வசூல் ஏலத்தில், 1 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. தொடர்ந்து, கூடுதலாக சுங்கம் வசூல் செய்யப்படுவதாக வியாபாரிகள், விவசாயிகள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். தொடர்ந்து, டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில், உப்பிடமங்லகம் டவுன் பஞ்.,ல், செயல் அலுவலர் தேவராஜூ முன்னிலையில் மாட்டு சந்தை ஏலம் நடந்தது. எட்டு பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சந்தைக்கு வரக்கூடிய மாடுகளுக்கு தலா, 50 ரூபாய் என்ற கட்டணம் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், ஏல நிர்ணய தொகை அதிகமாக இருப்பதாகவும் ஏலத் தொகையை குறைக்க வேண்டும் என்று ஏலதாரர்கள் கோரிக்கை வைத்தனர். இதன் காரணமாக, 70 லட்சம் ரூபாய் வரை ஏலத்தொகை குறைந்து கொண்டே வந்த நிலையில், அதற்கும் குறைவாக, 65 லட்சத்து, 1,000 ரூபாய் என ஏலத்தொகை குறைந்தது. ஏற்கனவே ஏலம் எடுத்த, மணப்பாறையை சேர்ந்த செல்வ ஆரோக்கியராஜ் தரப்பினர் மட்டுமே முன் வந்ததால், அவர்களுக்கே ஏலம் விடப்பட்டது.