/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சியில் மஞ்சப்பை இயந்திரம் அமைக்க வலியுறுத்தல்
/
அரவக்குறிச்சியில் மஞ்சப்பை இயந்திரம் அமைக்க வலியுறுத்தல்
அரவக்குறிச்சியில் மஞ்சப்பை இயந்திரம் அமைக்க வலியுறுத்தல்
அரவக்குறிச்சியில் மஞ்சப்பை இயந்திரம் அமைக்க வலியுறுத்தல்
ADDED : செப் 13, 2025 01:32 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில், மஞ்சப்பை தானியங்கி இயந்திரம் அமைக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மஞ்சப்பை தரும் தானியங்கி இயந்திரம் அமைக்கும் பணிகளை செய்து வருகிறது. தற்போது கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்த இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சியில் நெகிழிப்பைகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
எனவே, 10 ரூபாய் நாணயம் போட்டால் தானாக வழங்கக்கூடிய, மஞ்சப்பை இயந்திரத்தை அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்திலும், பேரூராட்சி அலுவலகத்திலும் நிறுவி சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை, மக்களுக்கு ஏற்படுத்த வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மேலும் இயந்திரத்தில், 10 ரூபாய் நாணயத்தை போடுவதன் வாயிலாக பைகளை பெறுகின்றனர். பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற சில கருத்துகளை இதன் மூலம் நீக்கி, எங்கும் பயன்படுத்தலாம் என்ற விழிப்புணர்வும் மக்களுக்கு வரும். எனவே, மாவட்ட நிர்வாகம் அரவக்குறிச்சியில் மஞ்சப்பை தானே வழங்கும் இயந்திரத்தை, நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.